'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஷோபனா, மஞ்சு வாரியரை போலவே, மலையாள நடிகையான ரீமா கல்லிங்கலும் நாட்டியத்தில் வல்லவர். அதனாலேயே பல மாணவர்களுக்கு நடனப்பயிற்சி அளிக்கும் விதமாக 'மாமாங்கம்' என்கிற நாட்டிய பள்ளியை நடத்தி வருகிறார். அங்கே இன்று காலை ட்ராக் சூட், டீசர்ட் கெட்டப்பில் திடீரென காரில் வந்திறங்கிய துல்கர் சல்மானை பார்த்து நடன பயிற்சிக்கு வந்திருந்த யுவதிகள் இன்ப அதிர்ச்சியில் ஷாக்காகி நின்றனர். ஆனால் ரீமா கல்லிங்கலோ, எந்த அதிர்ச்சியும் இல்லாமல் கேஷுவலாக துல்கரை வரவேற்றுள்ளார். காரணம் அப்பாயின்மென்ட் கொடுத்து வரச்சொன்னதே அவர்தானே..
விஷயம் இருக்கிறது. பிரபல மலையாள இயக்குனரான 'அன்வர்' புகழ் அமல் நீரத் இயக்கத்தில் புதிய படத்தில் டான்சராக நடிக்க இருக்கிறார் துல்கர் சல்மான். இதுநாள் வரை துல்கர் தான் நடித்த படங்களில் போகிறபோக்கில் நடனம் ஆடியிருப்பாரே தவிர, தீவிரமாக நடனம் ஆடியதில்லை. ஆனால் புதிய படத்தில் அவரது கதாபாத்திரமே டான்சர் என்பதால் அதற்கு தேவைப்படும் நடனப்பயிற்சியை மேற்கொள்வதற்காகத்தான் ரீமா கல்லிங்கலின் நடன பயிற்சி பள்ளிக்கு வந்தாராம். குறைந்தது ஒருவார பயிற்சியாவது இருக்கும் என்று சொல்லப்படுகிறது.