வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழ்நாடு மீண்டும் ஒரு மழை வெள்ள சேதத்தில் நேற்று முதல் தவிக்க ஆரம்பித்து விட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வந்த மழையை விட இப்போது பெய்து வரும் மழை அதிகமாக இருக்கும் என்கிறார்கள். அந்த சேதத்திலிருந்தே இன்னும் மீளாத தமிழகம் அடுத்த சேதத்திற்குத் தாங்குமா என்பது தெரியவில்லை.
ஆந்திராவில் வெள்ளம் ஏற்பட்ட போது யாருமே கேட்காமலே வாரி வழங்கிய தமிழ் நடிகர்கள் தமிழ்நாட்டில் வெள்ளம் ஏற்படும் போது வாய் மூடி இருப்பதேன் என திரையுலகத்திலிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் குரல் உயர்ந்தது. அதன் காரணமாக சூர்யா, கார்த்தி, சிவகுமார், விஷால், சத்யராஜ், சிபிராஜ், தனுஷ், விக்ரம் பிரபு, பிரபு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில நடிகர்கள் நடிகர் சங்கத்தினரிடம் தங்களது வெள்ள நிவாரணத் தொகையை வழங்கியுள்ளனர்.
ஆனால், தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் முதன்மையானவர்கள் என அழைக்கப்படும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்டோரும், பல முன்னணி நடிகைகளும் இதுவரை எந்தத் தொகையும் அளிக்காமல் அமைதி காத்து வருவது திரைப்பட ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்களது படங்களை தமிழ்நாட்டில் ஓட வைக்கும் ரசிகர்களுக்காக அவர்கள் இன்னும் எதையும் செய்ய முன் வராதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது.