ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
விஷால்-பாண்டிராஜ் முதன்முறையாக இணைந்துள்ள படம் கதகளி. இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்க, பாண்டிராஜின் பசங்க புரொடக்சன்ஸ் படத்தை வெளியிடுகிறது. கிராமத்து பங்காளி கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் மெட்ராஸ் கேத்ரின் தெரசா மற்றும் ரெஜினா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களில் ரெஜினா ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர்.
அதன்பிறகு நிர்ணயம், ராஜதந்திரம் போன்ற படங்களில் நாயகியாக நடித்த ரெஜினா இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். படம் முழுக்க பாவாடை தாவணி காஸ்டியூமில் நடித்திருக்கும் ரெஜினாவை, முந்தைய படத்தில் லவ் டிராக்கில் நடிக்க வைத்த பாண்டிராஜ், இந்த படத்தில் செண்டிமென்ட் காட்சிகளிலும் நடிக்க வைத்திருக்கிறாராம். அதனால், இதுவரையில்லாத வித்தியாசமான பர்பாமென்ஸை கொடுத்திருக்கிறாராம் ரெஜினா.
குறிப்பாக, கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் எப்படி க்ளைமாக்சில் கலங்க வைத்தாரோ, அதைவிட இந்த படத்தில் கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் பாச உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறாராம் பாண்டிராஜ். அந்தவகையில், ரெஜினாவுக்கும் அந்த காட்சியில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதனால் அந்த காட்சியில் பாச உணர்வுகளை அற்புதமா க வெளிப்படுத்தி பெரிய அளவில் ஸ்கோர் பண்ணியிருக்கிறாராம் ரெஜினா. அதனால் தமிழில் இதுவரை தனக்கு ஒரு சரியாக பிரேக் கிடைக்கவில்லையே என்று பீல் பண்ணிவந்த ரெஜினாவுக்கு இந்த கதகளி படம் பெரிய பிரேக் கொடுக்கும் என்கிறார்கள்.