ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி |
கடும் மழையால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் புறம்நகர் பகுதிகளில் வாழும் மக்கள் ரொம்பவே பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அரசு சார்பில் உணவு, இருப்பிடம் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தற்போது சினிமா உலகைச்சேர்ந்த சூர்யா, பிரபு, சிவகார்த்திகேயன், தனுஷ், கார்த்தி, விஷால் உள்ளிட்ட சில நடிகர்களும் நிவாரண நிதி அளித்துள்ளனர்.
இந்த நிலையில், கவர்ச்சி நடிகை சோனா, ரைஸ் பவுல் சேலஞ்ச் என்கிற அமைப்பு மூலமாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அதாவது, சோனாவின் இந்த அமைப்பு மூலமாக பலர் உதவிகள் வழங்கி வருகிறார்களாம். அந்த வகையில், இதுவரை 1500 கிலோ அரிசி உள்பட பல நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாம். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக அத்தியாவசிய பொருட்களை வழங்குமாறு இணையதளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ள சோனா, தனது அமைப்பின் மூலம் பெறப்படும் உதவிப்பொருட்களை நடிகர் சங்கம் மூலமாக விநியோகம் செய்து வருகிறாராம்.