டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'கலைப்புலி' தாணு தயாரிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் தெறி படத்தில் வித்தியாசமான மூன்று தோற்றங்களில் நடிக்கிறார் விஜய். மூன்று தோற்றங்களில் நடித்தாலும் படத்தில் விஜய்க்கு ஒரு கேரக்டர்தான். கடமை தவறாத கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்ஸன் என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாக தெறி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. பின்னர் கோவாவுக்கு இடம்பெயர்ந்தது தெறி படக்குழு. கோவாவைத் தொடர்ந்து தற்போது பல்கேரியாவில் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திலீப் சுப்பாராயன் மாஸ்டரின் இயக்கத்தில் அங்கே பரபரப்பான சண்டைக் காட்சியை படமாக்கி வருகிறார்கள்.
இந்த ஆக்ஷன் காட்சிகளில் ஹாலிவுட் ஸ்டன்ட் கலைஞர் ஒருவரையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். டாம் க்ரூஸ் நடிப்பில் வெளிவந்த 'மிஷன் இம்பாஸிபிள்' படத்தின் 5 ஆம் பாகத்தில் ஸ்டன்ட் டிரைவராகப் பணியாற்றிய Mauro Calo என்பவர் 'தெறி' படத்தின் ஆக்ஷன் காட்சிகளை உருவாக்குவதில் திலீப் சுப்பாராயன் உடன் இணைந்து பங்கு வகித்திருக்கிறாராம். இந்த தகவலை தெறி படத்தின் இயக்குனர் அட்லி வெளியிட்டிருக்கிறார். ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ், இயக்குனர் அட்லி, மாஸ்டர் திலீப் சுப்பாராயன் ஆகியோர் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.