அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
விஜய்சேதுபதி, விஷ்ணு இருவரையும் வைத்து இடம் பொருள் ஏவல் என்ற படத்தை இயக்கினார் சீனுராமசாமி.
கடந்த வருடமே படப்பிடிப்பு நிறைவடைந்தது.
படப்பிடிப்பு முடிவடைந்த சில மாதங்களிலேயே போஸ்ட்புரடக்ஷன்ஸ் பணிகளை முடித்து படத்தை ரெடி பண்ணினார் சீனுராமசாமி.
அப்படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இடம் பொருள் ஏவல் படத்தை வெளியிட முடியவில்லை.
அதன் காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளானார் சீனுராமசாமி.
அவரது கஷ்டத்தைப் போக்குவதற்காகவே ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரிப்பில் தான் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள படத்தை இயக்கும் வாய்ப்பை சீனுராமசாமிக்கு வாங்கிக் கொடுத்தார் விஜய்சேதுபதி.
அவரது நல்ல மனசை குறிக்கும் வகையில் தர்மதுரை என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படம் டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.
இந்தப் படத்தில் நான்கு கதாநாயகிகள் நடிக்க உள்ளனர்.
வழக்கமாக தன் படத்தின் கதாநாயகிகளை விஜய்சேதுபதிதான் தீர்மானிப்பார்.
அந்த அடிப்படையில், அவரது ஆஸ்தான நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி ஆகிய இருவரும் இந்தப் படத்தில் கண்டிப்பாக நடிப்பார்கள் என்ற தெரிகிறது.
மற்ற இரண்டு கதாநாயகிகள் யார் என்று இன்னும் முடிவு செய்யவில்லையாம்.