தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'நண்பேன்டா' படத்திற்குப் பிறகு இந்த ஆண்டில் 'கெத்து' படத்தை மட்டுமே கை வசம் வைத்திருந்தார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். 'என்னை அறிந்தால், அனேகன்' ஆகிய இரண்டு படங்களும் ஹாரிஸுக்கு சுமாரான வெற்றியைத்தான் கொடுத்தன. 'கெத்து' படத்தின் பாடல்கள் இனிதான் வெளிவர வேண்டும்.
'கெத்து' படத்திற்குப் பிறகு வேறு எந்த படமும் ஹாரிஸுக்கு ஒப்பந்தம் ஆகாமல் இருந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து அவருக்கு சில படங்கள் ஒப்பந்தமாகியுள்ளன. ஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் 'சிங்கம் 3', ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா நடிக்கும் படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு இயக்கும் படம், கௌதம் மேனன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ள படம் என அடுத்த ரவுண்டிற்கு அவர் தயாராகி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வெளிவந்த படங்கள் மிகப் பெரும் வெற்றியைப் பெறாததும், பாடல்களும் சூப்பர் ஹிட் வரிசையில் சேராததும்தான் அவருடைய தொய்வுக்குக் காரணம் என் கோலிவுட்டினர் சொல்கிறார்கள். அடுத்த ரவுண்டில் தன்னுடைய பெயரை மீண்டும் நிரூபிக்க ஹாரிஸுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்துள்ளன.