வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் |
சிம்பு நடித்து வரும் அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பை கெளதம்மேனன் தொடங்கியிருந்த போதுதான், எதிர்பாராதவிதமாக அஜீத்தின் கால்சீட் அவருக்கு கிடத்தது. அதனால் சிம்பு படத்தை நிறுத்தி வைத்து விட்டு, அஜீத்தின் என்னை அறிந்தால் பட வேலைகளில் இறங்கினார் கெளதம்மேனன். அதனால் அந்த கேப்பில் இது நம்ம ஆளு, வாலு படங்களில் நடித்தார் சிம்பு.
அதேபோல் சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தரை வைத்து ஒரு படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியிருந்தார் கோலிசோடா விஜய்மில்டன். ஆனால் அந்த நேரம் பார்த்து விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவே, டி.ஆர்., நடிக்கயிருந்த படத்தை தள்ளி வைத்து விட்டு, பத்து எண்றதுக்குள்ள படத்தை தொடங்கினார் விஜய்மில்டன். சில மாதங்களுக்கு முன்பே அந்த படம் திரைக்கு வந்துவிட்டது.
இந்த நிலையில், அடுத்து மீண்டும் கோலிசோடா மாதிரி ஒரு படத்தை விஜய்மில்டன் தொடங்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அவர் கிடப்பில் போட்டிருந்த டி.ஆர்., நடிக்கும் படவேலைகளையே தற்போது தொடங்கியிருக்கிறார். அந்த படத்தின் கதை விவாதம் விறுவிறுப்பாக நடந்து கொண்டி ருக்கிறது. இதற்கிடையே படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளிடமும் கால்சீட் பேசி வரும் விஜய்மில்டன், கோலிசோடா படத்தைப் போலவே டி.ஆர்., நடிக்கும் படத்தையும் தானே தயாரித்து இயக்குகிறார்.