தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நவம்பர் 27ம் தேதி வெள்ளிக் கிழமை அன்று வெளியான உப்பு கருவாடு, 144, இஞ்சி இடுப்பழகி ஆகிய மூன்று படங்களுமே வழக்கமான படங்களிலிருந்து மாறுபட்ட படங்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பட வெளியீட்டிற்கு முன் இருந்தது. அந்த விதத்தில் மூன்று படங்களுமே வழக்கமான மசாலாப் படங்களாக இல்லாமல் கொஞ்சம் மாறுபட்ட படங்களாகவே அமைந்தது.
ஆனாலும், இஞ்சி இடுப்பழகி படம் முழுமையான தமிழ்ப் படமாக இல்லாமல் பல காட்சிகளில் தெலுங்கு உச்சரிப்பே இருந்தது. தெலுங்கு நடிகர்கள் பலரும் படத்தில் இடம் பெற்றிருந்ததால் ஒரு தெலுங்குப் படத்தைப் பார்த்த உணர்வே ஏற்பட்டதாக ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
144 படம் ஒரு வித்தியாசமான கதையமைப்பு கொண்ட படம். ஆனால், சுவாரசியமான காட்சிகளை அதிகம் வைக்காமல் திரைக்கதையில் கோட்டை விட்டு இ...ழுவையாகச் சொல்லியிருப்பது படத்திற்கு மைனஸ் பாயின்டாக அமைந்துள்ளது. சுஜாதா எழுதிய வசந்த காலக் குற்றங்கள் நாவலை இப்படி கெடுத்திருக்க வேண்டாமென சுஜாதாவின் தீவிர ரசிகர்கள் புலம்புகிறார்கள்.
கௌரவம் படத்தின் தோல்விக்குப் பிறகு மீண்டும் தன்னை நிரூபீக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இயக்குனர் ராதாமோகன், அதிக பிரபலமில்லாத நடிகர்களை வைத்து உப்பு கருவாடு படத்தை ரசிக்கும்படி கொடுத்துள்ளார் என்ற பேச்சுதான் அதிகம் எழுந்துள்ளது. மிகப் பெரும் நடிகர், நடிகைகளின் பின்னால் போகாமல் தன் கதையை நம்பி இந்தப் படத்தை ரசிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார். ஆனாலும், படத்தின் முதல் அரை மணி நேரத்திற்கும் மேற்பட்ட காட்சிகள் நம் பொறுமையை சோதிக்கின்றன என்பது பலரின் குற்றச்சாட்டு.
இந்த வார மும்முனைப் போட்டியில் உப்பு கருவாடு முன்னிலையில் இருக்கிறார் என்றுதான் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.