ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ரஜினி நடித்த சிவாஜி படத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா. அதையடுத்து விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி என மெகா படங்களில் நடித்த அவர் பின்னர் நடித்த படங்கள் வெற்றியாக அமையாததால் ஸ்ரேயாவின் மார்க்கெட் கவிழ்ந்தது. அதனால் ராஜபாட்டை படத்தில் விக்ரமுடன் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடிய பிறகு எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்கவில்லை ஸ்ரேயா.ஆனபோதும், தெலுங்கு, இந்தியில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், தற்போது முப்பத்தி மூன்று வயதாகி விட்ட ஸ்ரேயா விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக திட்டமிட்டிருப்பதாக பாலிவுட்டில் பரபரப்பு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அந்த செய்தியை மறுத்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா. அதில், இப்போதைக்கு எனக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லை. நடிப்பில் மட்டுமே கவனம் உள்ளது. அதோடு, எனக்கென்று இறைவன் முடிவு செய்து வைத்திருக்கும் நபர் என் கண்ணெதிரே தோன்றும்போது அவரை திருமணம் செய்து கொள்வேன்.
மேலும், தற்போது நான் மும்பையில் பெரிய அளவிலான ஒரு அழகு நிலையம் நடத்தி வருகிறேன். இங்கு வேலை செய்பவர்களில் பெரும்பாலானோர் கண் பார்வை இல்லாத பெண்கள்தான். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே அந்த அழகு நிலையத்தை நடத்தி வருகிறேன் என்று கூறும் ஸ்ரேயா, என்னை நம்பி வந்திருக்கும் பார்வையில்லாதவர்களுக்கு விழி போல இருந்து நான் உதவிகள் செய்வேன் என்றும் கூறியுள்ளார்.