தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியுள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. வெள்ள நிவாரண நிதி கேட்டு தமிழக அரசு மத்திய அரசிடம் முறையிட்டுள்ளது. முதற்கட்டமாக தமிழகத்திற்கு ரூ.940 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. இதுஒருபுறம் இருக்க தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் நேரடியாக சென்று வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.
இந்நிலையில், சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் சினிமா நடிகர்கள் இதுதொடர்பாக வாய் திறக்கவே இல்லை என்று சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கும் சூழலில், நேற்று நடைபெற்ற ஆடியோ விழாவில் கூட ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், நடிகர்கள் யாரும் உதவ முன்வரவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தச்சூழலில், வெள்ள நிவாரணம் தொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தின் சார்பில் ரூ.25 லட்சம் நிதி நடிகர் சங்க தலைவர் நாசரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதேப்போன்று நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருக்கும் விஷால் ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளார். நடிகர் தனுஷ் ரூ.5 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.
இந்த நிதி எல்லாம் நடிகர் சங்க தலைவர் நாசரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்னும் பல நடிகர்கள் நிதி உதவி தருவதாக சொல்லியிருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் திரட்டி முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர்.