பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாளத்தில் காஞ்சனமாலா - மொய்தீன் உண்மை காதல்கதையை வைத்து வெளியாகி ஹிட்டான 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தில், எப்படி பிருத்விராஜ் தான் கதாநாயகனாக நடிக்கவேண்டும் என காஞ்சனமாலா சொன்னாரோ, அதேபோல காஞ்சனமாலா கதாபாத்திரத்தில் நடிக்க பார்வதி தான் சரியான நபராக இருப்பார் என முடிவுசெய்த இயக்குனர் ஆர்.எஸ்.விமல் வேறெந்த சமரசமும் செய்துகொள்ளாமல் அவரையே நடிக்கவைத்தார். அவரும் படத்தில் காஞ்சனமாலாகவே வாழ்ந்திருந்தார். இப்போது மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் மனதிலும் மிகப்பெரிய இடத்தை பிடித்துவிட்ட த்ரிஷ்யம்' புகழ் டெரர் நாயகி ஆஷா சரத், தானும் ஒருகாலத்தில் காஞ்சனமாலாவாக நடித்த கதையை ஒரு பேட்டியின்போது பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது 21 வருடங்களுக்கு முன்பு அவர் கல்லூரியில் படித்துவந்த காலகட்டத்தில் நடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தாராம். அந்தசமயத்தில் காஞ்சனமாலா - மொய்தீன் கதை கல்லூரி மாணவர்களிடையே ரொம்பவும் பேமஸாம்.. அப்போது காஞ்சனமாலா - மொய்தீன் காதல்கதை பற்றி அப்போது ஒரு டெலிபிலிம் எடுக்கப்பட்டபோது அதில் காஞ்சனமாலாவாக நடித்தவர் ஆஷா சரத் தானாம். தான் பல வருடங்களுக்கு முன் நடித்த ஒரு கதாபாத்திரம் இப்போது சென்சேஷனல் செய்தியானது குறித்து சந்தோஷத்தில் இருக்கிறாராம் ஆஷா சரத்.