தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
உயிரோடு இருப்பவர்கள் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பும் விஷமிகளுக்கு அப்படி என்னதான் அதில் இன்பம் கிடைக்கிறதோ தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து அதை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். குறிப்பாக பிரபலங்களை குறிவைத்து தான் இந்த வதந்திகள் பரவுகின்றன. தமிழ்சினிமாவில் கவுண்டமணி, கனகா, மறைந்த ஆச்சி மனோரமா ஆகியோர் இப்படி வதந்தியால் பாதிக்கப்பட்டவர்கள் தான். கேரளாவில் கூட தேசிய விருதுபெற்ற மலையாள நடிகர் சலீம் குமார், சமீபத்தில் குணச்சித்திர நடிகர் மாமுகோயா ஆகியவர்களும் இந்த மரண வதந்திக்கு தப்பவில்ல.. இதில் மாமுகோயா, “நான் செத்தா நானே பேஸ்புக்கில் அப்டேட் பண்ணுகிறேன்.. உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம்” என பதிலடி கொடுத்திருந்தார்.
இப்போது லேட்டஸ்டாக இந்த மரண வதந்தியில் சிக்கியவர் மலையாள காமெடி நடிகரான ஜெகதிஸ்ரீ குமார். இவர் சில வருடங்களுக்கு முன் விபத்தில் சிக்கி அதிலிருந்து மீண்டு, தற்போது நலமுடன் இருக்கிறார்.. ஆனால் இன்றுகாலை இவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டதாக பேஸ்புக்கில் இவரது புகைப்படத்துடன் யாரோ பொய்ச்செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தனர். பலரும் நம்பவேண்டும் என்பதற்காக பிரபல் சேனல் ஒன்றின் டிவி லோகோவுடன் கூடிய ஸ்க்ரீன் ஷாட்டை ஜெகதிஸ்ரீ குமார் படத்திற்கு பிரேமாக வைத்திருந்ததால் பலரும் இது உண்மைச்செய்தி என்றே நம்பிவிட்டார்கள்.. ஆனால் இந்த தகவல் கேள்விப்பட்ட ஜெகதிஸ்ரீ குமாரின் மகள் ஸ்ரீலட்சுமி ஸ்ரீகுமார் இதை மறுத்துள்ளார்.. தனது தந்தை நலமாக உள்ளார் என்று கூறியுள்ளதோடு, இந்த வதந்தியை பரப்பிய வீணர்களையும் வன்மையாக கண்டித்துள்ளார்.