தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பெரும்பாலும் நடிகர்களைப் பொறுத்தவரை பாடியை பிட்னஸாக வைத்துக்கொள்வதற்கு டயட்ஸ், ஜிம்னாஸ்டிக் பயிற்சி என்றுதான் ஈடுபடுவார்கள். ஆனால் இந்த விசயத்தில் ஆர்யா மாறுபட்டவராக இருக்கிறார். அதாவது சாலைகளிலேயே ஹெல்மெட் அணிந்தபடி அவர் சைக்கிள் ஓட்டிச்செல்கிறார். அதுவும் தனது வீட்டை சுற்றி அவர் ரவுண்டு அடிப்பதில்லை. சென்னையில் தொடங்கி மகாபலிபுரம் வரை சென்று வருகிறார்.
மேலும், சந்தானம் ஒருமுறை தானும் சைக்கிள் பயிற்சிக்கு வருவதாக சொன்னபோது, அவரது வீட்டுக்கதவை அதிகாலை 5 மணிக்கே போய் தட்டியிருக்கிறார் ஆர்யா. அதையடுத்து ரெண்டு பேருமாக சேர்ந்தே சென்னை சிட்டியை கடந்து வெகுதூரம் ஆளுக்கொரு சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது சாலையில் இருந்த ஒரு டீ கடையில் டீ, பஞ்ஜி சாப்பிட்டிருக்கிறார் ஆர்யா. இதை அந்த சமயத்தில் ஒரு மேடையில் தெரிவித்தார் சந்தானம்.
இந்த நிலையில், தனது உடம்பை பராமரிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் ஆர்யா, கடந்த வாரத்தில் சென்னையில் மழை கொட்டித்தீர்த்தபோதும், தனது சைக்கிள் பயணத்தை சென்னையில் இருந்து மகாபலிபுரம் வரை நடத்தியிருக்கிறார். அப்போது ஆர்யாவுடன் அவரது சில நண்பர்களும் உடன் சென்றார்களாம்.