டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
ஈராஸ் இன்டர்நேஷனல் , பன்சாலி புரடெக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ''பஜிராவ் மஸ்தானி''. இத்திரைப்படத்தில் ரன்வீர் சிங் , தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர். வருகிற டிசம்பர் 18ந் தேதி உலகமுழுவதும் வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கிலும் இப்படம் வெளிவரவுள்ளது. பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா மதன் கார்க்கி இப்படத்தின் தமிழ் பாடல்கள் மற்றும் வசனம் எழுதியுள்ளார்.
படம் பல்வேறு மொழிகளில் வெளியாவது குறித்து இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி கூறியதாவது: பஜிராவ் மஸ்தானி நான் பல நாட்களாக சொல்ல நினைத்த கதை. இத்திரைப்படத்தை தென்னிந்தியாவை சேர்ந்த ரசிகர்கள் அவர்களுடைய சொந்த மொழியில் பார்க்க இருக்கிறார்கள். இத்திரைப்படம் என்னுடைய பலநாள் கனவு , நான் இந்த கனவோடு பலநாட்கள் வாழ்ந்திருக்கிறேன். மொழிகளை கடந்து என்னை போல் ரசிகர்களும் இந்த கனவோடு வாழவேண்டும்" என்கிறார்.