ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சரவணன் மீனாட்சி தொடரில் முதல் பாகத்தில் மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜா நடித்தனர். அவர்களுடன் அப்பா-அம்மாவாக டைரக்டர் ராஜசேகர்-குயிலியும் நடித்தனர். அப்போது காதலர்களாக நடித்த செந்தில்-ஸ்ரீஜா இருவருக்குமிடையே நிஜத்திலும் காதல் ஏற்பட்டு, பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதையடுத்து மிர்ச்சி செந்தில் சினிமாவில் நடிப்பை தொடர்ந்து வரும் நிலையில் ஸ்ரீஜா இல்லத்தரசியாகி விட்டார்.அதையடுத்து, சரவணன் மீனாட்சி தொடரின் சீசன்-2வில் பின்னர் கவின்-ரஷிதா இருவரும் நடித்து வருகின்றனர். முன்பு அப்பா-அம்மாவாக நடித்த டைரக்டர் ராஜசேகர்-குயிலி இருவரும் சீசன்-2வில் தாத்தா பாட்டியாகி விட்டனர்.
மேலும், சீசன் -2வில் நாயகியாக நடித்து வரும் ரஷிதா, தனது துடுக்குத்தனமான நடிப்பினால் சின்னத்திரை நேயர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அதேபோல் சினிமாத்துறையினரையும் அவரது நடிப்பு கவர்ந்ததால், உப்புக்கருவாடு படத்தில் கருணாகரனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ரஷிதா. அதோடு, சின்னத்திரையை விடவும் பெரிய திரையில் இன்னும் பலபடி உயர்ந்து சிறப்பான பர்பாமென்ஸ் கொடுத்துள்ள ரஷிதா, தொடர்ந்து குடும்பப் பாங்கான வேடங்கள் கிடைத்தால் சின்னத்திரையை போலவே சினிமாவையும் தொடரப்போகிறாராம்.