நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
இலங்கையில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் பூஜா. ஜே ஜே, அட்டகாசம், உள்ளம் கேட்குமே, ஜித்தன், நான் கடவுள் என பல படங்களில் நடித்தார். அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் விடியும் முன். அதையடுத்து கடவுள் பாதி மிருகம் பாதி என்ற படத்தில் நடித்தார். ஆனால அப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அதையடுத்து பூஜாவுக்கு புதிய படங்கள் இல்லை. அதனால் சிங்களப்பெண்ணான அவர் ஸ்ரீலங்காவுக்கே திரும்பிச்சென்று விட்டார்.
இந்தநிலையில், தற்போது அதே ஸ்ரீலங்காவில் இருந்து இன்னொரு நடிகையும் தமிழ் சினிமாவுக்கு இறக்குமதியாகியிருக்கிறார். அவர் பெயர் சமந்தி. சஞ்சீவ் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ள சூரத்தேங்காய் என்ற படத்தில் அரவிந்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், இலங்கையில் இருந்து முன்பு வந்த பூஜா சிங்கள பெண். ஆனால் இந்த சமந்தியோ தமிழ் பெண். அதோடு, முதல் படத்திலேயே கிராமத்து அதிரடி பெண்ணாக நடித்துள்ள அவர், இந்த படத்திற்கு பிறகு தமிழில் தொடர்ந்து நடிப்பதற்காகவும் கதை கேட்டு வருகிறாராம்.