சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
சிவாஜிகணேசன்-சாவித்ரி-விஜய் நடித்த ஒன்ஸ்மோர் படத்தில் தமிழில் அறிமுகமானவர் சிம்ரன். மும்பை நடிகையான இவர் இந்தியில் சில படங்களில் நடித்து விட்டே தமிழுக்கு வந்தாலும் பின்னர் இந்தி படங்களை விட தென்னிந்திய மொழிப்படங்களிலேயே கூடுதல் கவனம் செலுத்தினார். மேலும், தமிழில் ரஜினி தவிர அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஒரு பெரிய ரவுண்டு வந்த சிம்ரன், திருமணத்திற்கு பிறகும் தனது மாஜி ஹீரோக்கள் தனக்கு கைகொடுப்பார்கள் என்று எதிர்பார்த்து சென்னையிலேயே குடியேறினார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி யாரும் அவருக்கு சான்ஸ் கொடுக்கவில்லை.
அதனால், சென்னையில் முகாமிட்டபடியே சில சீரியல்களில் நடித்து வந்த சிம்ரன், ஆஹா கல்யாணம், திரிஷா இல்லன்னா நயன்தாரா போன்ற படங்களில் நடித்தவர் இப்போது கரையோரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதையடுத்தும் சொந்தமாக படம் தயாரிக்கப்போவதாக கூறி வருகிறார். மேலும், பெரும்பாலும் நடிகர் நடிகைகள் தாங்கள் நடிக்க வரும் படப்பிடிப்பு தளங்களுக்கு தங்களது பேமிலி நபர்களை அழைத்து வரமாட்டார்கள். அப்படியே வந்தாலும் அவர்களை தாங்கள் கேமரா முன்பு நடிக்கும் ஏரியா பக்கம் வரவிடமாட்டார்கள்.
ஆனால் இந்த விசயத்தில் சிம்ரன் வித்தியாசமானவராக இருக்கிறார். அதாவது, ஒவ்வொரு படப்பிடிப்பு தளங்களுக்கு தனது கணவர் தீபக் மற்றும் மகன்கள் அதீப், ஆதித் ஆகியோருடன் வருபவர், தான் நடிப்பதை அவர்களை வேடிக்கை பார்க்க வைக்கிறார். அதோடு, சிம்ரன் நடிக்கும் காட்சிகளில் அவர் சிறப்பாக நடித்து விட்டால் அவரது கணவர் தீபக் உடனே தனது கட்டை விரலை உயர்த்திக்காட்டுகிறார். அதேபோல் ஸ்பாட்டில் தனது பேமிலி இருக்கிறதே என்கிற டென்சன் துளியும் இல்லாமல் எத்தனை பெரிய ஷாட் என்றாலும் அதை சிங்கிள் டேக்கில் முடித்துக்கொடுத்து டைரக்டர்களிடம் கைதட்டல் பெறுகிறார் சிம்ரன்.