ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மாரி படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் 'தங்கமகன்' படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. அதையடுத்து பிரபுசாலமன் இயக்கும் பெயரிடப்படாத படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருப்பவர், இந்த படத்தை முடித்து விட்டு, வெற்றிமாறனின் வடசென்னை மற்றும் துரைசெந்தில்குமார் இயக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் இன்னும் தொடங்கவில்லை. பிரபுசாலமன் படவேலைகளை முடித்துக்கொடுத்து விட்டுத்தான் இந்த படங்களில் நடிக்கிறாராம் தனுஷ்.
மேலும், வடசென்னை படத்தில் வட சென்னைவாசியாக நடிக்கும் தனுஷ், துரை.செந்தில்குமார் இயக்கும் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த படம் அரசியல் கதைக்களத்தில் உருவாகிறது. இதற்கு முன்பு தனுஷ் நடித்த சில படங்களில் லேசான அரசியல் டச் இருந்தாலும் இந்த மாதிரி முழுக்கதையும் அரசியலில் பயணித்ததில்லை. அந்த வகையில், இது தனுஷின் அதிரடி அரசியல் படமாக இருக்கும் என்கிறார்கள்.
குறிப்பாக, ரஞ்சித் இயக்கத்தில் கார்த்திக் நடித்து வெளியான மெட்ராஸ் படம் எப்படி அரசியல் சம்பந்தப்பட்ட கதையில் உருவானதோ அதேபோல் இந்த படத்திலும் அரசியல் கட்சியினர் தங்களது கட்சி கொடியை வைப்பது சம்பந்தமான பிரச்சினை பூதாகரமாக வெடிக்குமாம். ஒரு கொடிக்காக என்னென்ன கலவரங்கள் நடக்கிறது என்பதுதான் இந்த படமாம். அதனால் தற்போது அந்த படத்திற்கு கொடி என்று பெயரை தேர்வு செய்து வைத்திருக்கிறார்களாம்.