'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
ஓடும் பஸ்சில், ஓடும் ரயிலில், பறக்கும் விமானத்தில், ஒரு தனி அறையில் முழு பாடல் காட்சிகளையும் எடுத்திருக்கிறார்கள். முதன் முறையாக ஒரு கேரவனுக்குள்ளேயே முழு பாலையும் எடுத்திருக்கிறார்கள்.
கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்திற்காக இந்த பாடல் எடுக்கப்பட்டுள்ளது. கதைப்படி கவுண்டமணி சினிமா கம்பெனிகளுக்கு கேரவன் வாடகைக்கு விடுகிறவர். அதோடு காதலர்களையும் சேர்த்து வைக்கிறவர். மதுரையிலிருந்து தப்பி ஓடிவரும் காதலர்களை அவர்களது பெற்றோர்களுடன் சேர்த்து வைப்பதற்காக தனது சகாக்களுடன் காதலர்களை கேரவனில் மதுரைக்கு அழைத்துச் செல்வார். அப்போது இந்த பாடல் வருகிறது.
"ஏதாவது புதிதாக செய்யலாமே என்று தோன்றியபோது இந்த யோசனை வந்தது. 17 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்ட கேரவனிலேயே பாடலை எடுத்தோம். இசை அமைப்பாளர் அருணகிரியின் இசையும், ஒளிப்பதிவாளர் கண்ணனின் உழைப்பும் இந்த பாடலில் தெரியும்" என்கிறார் இயக்குனர் கணபதி பாலா.