தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனர் அமீரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சந்த்ரா. எழுத்தாளர் மற்றும் கவிதாயினி. இவர் பல வருட போராட்டத்துக்கு பிறகு தனது முதல் படத்தை தொடங்கியிருக்கிறார் படத்தின் பெயர் கள்ளன். இயக்குனர் கரு.பழனியப்பன் மந்திர புன்னகை படத்திற்கு பிறகு இதில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக டில்லியைச் சேர்ந்த தமிழ் பெண் நிகிதா ஹீரோயினாக அறிமுகமாகிறார். நமோ நாராயணன், சவுந்தரராஜா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். எட்செட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் கேரள மாநிலம் கொச்சியில் நேற்று தொடங்கியது. தயாரிப்பாளர் மதியழகன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இதன் படப்பிடிப்புகள் தேனி, போடி மெட்டு, பகுதிகளில் 45 நாட்கள் ஒரே செட்யூலாக நடக்கிறது. கேரளா சென்றுள்ள படக்குழுவினர் படத்தை முடித்து விட்டுத்தான் சென்னை திரும்புகிறார்கள்.