இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மணிரத்னம் இயக்கிய 'ஆய்த எழுத்து' படத்தில் இருந்து மூன்று ஜோடிகளில் மாதவன் - மீரா ஜாஸ்மின், சூர்யா - இஷா தியோல், சித்தார்த் - த்ரிஷா ஆகியோர் இருந்தனர். 2004ல் வெளிவந்த படத்தில் ஒவ்வொரு ஜோடியும் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களைக் கவர்ந்தது. தமிழில் அப்போதே ஒரு மல்டி ஸ்டார் படத்தை இயக்கியிருந்தார் மணிரத்னம். ஆனால், அப்போது படத்தில் நடித்த அனைவருமே வளர்ந்து வரும் நடிகர்களாகவே இருந்தார்கள். தமிழில் அதற்குப் பிறகு அப்படி ஒரு கூட்டணி மீண்டும் அமையவில்லை.
11 வருடங்களுக்குப் பிறகு அந்த ஜோடிகளில் ஒன்றான சித்தார்த், த்ரிஷா ஜோடி 'அரண்மனை 2' படத்தின் மூலம் தமிழில் மீண்டும் இணைந்துள்ளது. பொங்கலுக்கு வெளியாக உள்ள 'அரண்மனை 2' படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. “12 வருடங்களுக்குப் பிறகு நடிகை த்ரிஷா, நடன இயக்குனர் பிருந்தா ஆகியோருடன் பீச்சில் படப்பிடிப்பு. காலம் பறக்கிறது,” தற்போதைய படப்பிடிப்பு பற்றி 'அரண்மனை 2' படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
'அரண்மனை 2' படத்திற்கு முன்பாக சித்தார்த் நடித்துள்ள 'ஜில் ஜங் ஜக்' அடுத்த மாதம் வெளியாகிறது.