‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சென்னையில் கடந்த 23ம் தேதி திங்கள்கிழமையன்று மாலை ஆரம்பமான மழை நள்ளிரவு வரை நீடித்தது. கடும் மழை காரணமாக தெருக்கள் முழுவதும் தேங்கிய மழை நீரால் சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது. அலுவலம் முடிந்து வீடு திரும்ப முயற்சித்த பலர் நள்ளிரவு நேரத்திலும், அதிகாலையிலும்தான் வீடு போய்ச் சேர்ந்தார்கள்.
அந்தச் சமயத்தில் மும்பையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த நடிகை ஹன்சிகா, கிண்டி அருகே போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு சிக்கித் தவித்தாராம். அவர் கார் நின்ற இடத்தை விட்டு நீண்ட நேரமாகியும் நகராததால், உதவிக்கு வேறு யாரையும் அழைக்க முடியாத சூழ்நிலையில் முழங்கால் அளவிற்குத் தேங்கியிருந்த மழை நீரில் பொதுமக்களுடன் நடந்து அருகில் உள்ள ஹோட்டலுக்குச் சென்று தஞ்சமடைந்தாராம்.
மும்பையில் 2005ல் இப்படி ஒரு வெள்ளம் வந்த போது தோழியின் வீட்டிலேயே தங்கியிருந்து விட்டு நிலைமை சீரானதும் வீட்டுக்குச் சென்றதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
சென்னையை என்னுடைய வீடாகவே நினைக்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் தைரியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு என்னுடைய அன்பும், பிரார்த்தனையும் எப்போதுமிருக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.