இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இனி வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டும் நடிக்க நடிகர் ரன்பீர்கான் முடிவு செய்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகர் ரன்பீர்பூர். இந்தாண்டு இவரது நடிப்பில் மூன்று படங்கள் தயாராகியுள்ளது. இதில் 'ராய்', 'பாம்பே வெல்வெட்' படங்கள் ஏற்கனவே ரிலீஸாகிவிட்டது, 'தமாஷா' படம் நாளை (நவ.,27ம் தேதி) ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், இனி வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது... இனி, ஒரேசமயத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளேன். ஒரு படத்தின் கேரக்டரில் இருந்து மற்றொரு படத்தின் கேரக்டருக்கு உடனடியாக மாறுவது சற்று கடினமாக உள்ளது. ஆனால் நான் மாறித்தான் ஆக வேண்டும், ஏனென்றால் நான் ஒரு நடிகன், அது தான் எனது அடையாளம் என்று கூறியுள்ளார்.
'தமாஷா' படத்தை இம்தியாஸ் அலி இயக்கியுள்ளார். ரன்பீருடன் தீபிகா படுகோனே நடித்துள்ளார். இப்படம் நாளை(நவ.27) ரிலீஸாகிறது.