பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மம்முட்டியை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி அவருக்கு தமிழ்சினிமாவிலும் ஒரு இடத்தைப் பிடித்துக் கொடுத்தது என்றால் அது 1988ல் மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெளியான 'ஒரு சி.பி.ஐ.டைரிக்குறிப்பு' படம் தான். இந்தப்படத்தில் சேதுராம ஐயர் என்ற சி.பி.ஐ அதிகாரி வேடத்தில் வழக்கத்திற்கு மாறான மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மம்முட்டி. இதுவரை இந்திய மொழிகளில் ஒரு படம் அடுத்தடுத்து அதன் தொடர் பாகங்களாக நான்குமுறை எடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அது இந்தப்படமாகத்தான் இருக்கும்.
இந்தப்படத்தின் இரண்டாவது பாகமான 'ஜகார்த்தா 1989ல் வெளியானது. ஆனால் சுமாராகத்தான் போனது. அதன்பிறகு இதன் அடுத்தடுத்த பாகங்களாக 2004ல் 'சேதுராமையர் சி.பி.ஐ' வெளியாகி வெற்றி பெற, 2005ல் நான்காவது பாகமாக வெளியான 'நேரறியான் சி.பி.ஐ' தோல்வியை தழுவியது. பத்து வருடங்கள் கழித்து இப்போது ஐந்தாவது பாகத்தை எடுப்பதற்கான ஆயுத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவாம். இதிலும் வழக்கம்போல மம்முட்டி தான் ஹீரோ.. முதலாம், மூன்றாம் பாகங்களின் வெற்றி செண்டிமெண்ட் இந்த ஐந்தாம் பாகத்திற்கும் ஒர்க் அவுட் ஆகும என்றே சொல்கிறார்கள்..