இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? |
டிசம்பர் 4 ஆம் தேதி அன்று ஈட்டி, பசங்க-2, உறுமீன், திருட்டு ரயில் உட்பட அரை டஜன் படங்கள் வெளியாகின்றன. அதனால் பசங்க -2 படத்துக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. பசங்க-2 சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படமாக இருந்தாலும், இப்படம் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதால் படம் கமர்ஷியலாக இருக்குமா என்ற சந்தேகம் தியேட்டர்காரர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் கவின், நயனா ஆகியோருடன் சூர்யா, அமலா பால், பிந்து மாதவி, கார்த்திக் குமார் ஆகியோரும் நடித்துள்ளார்கள். ஆனால் சூர்யா கௌரவ வேடத்தில் நடித்திருப்பதாகவே சொல்லப்பட்டு வந்தது. அதனால்தான் தியேட்டர்காரர்கள் தயங்கி உள்ளனர். பசங்க - 2 படத்தைவிட ஈட்டி படம் கமர்ஷியலாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அந்தப்படத்துக்கு கூடுதலாக தியேட்டர்கள் கிடைத்துள்ளன. தற்போது கிடைத்த தகவலின்படி பசங்க - 2 படத்துக்கு 200 தியேட்டர்கள் கூட கிடைக்கவில்லை. ஈட்டி படத்துக்கோ 300 தியேட்டர்களுக்கு மேல் கிடைத்துள்ளதாம்.
சென்சாருக்கு சென்ற பசங்க -2 படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் படத்திற்கு எந்த கட்டும் கொடுக்கவில்லையாம். அனைவரும் பார்க்க கூடிய படம் என்ற யு சான்றிதழும் வழங்கியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கிறீர்கள் என்று படக்குழுவினருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர். இதனால் பசங்க-2 படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.