ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வாமனன், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்புக்குதிரை, வை ராஜா வை என பல படங்களில் நடித்தவர் ப்ரியா ஆனந்த். இப்போது அவரது கைவசம் கூட்டத்தில் ஒருவன் என்ற படம் மட்டுமே உள்ளது. இப்படத்தில் தெகிடி அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்கிறார் ப்ரியாஆனந்த். மேலும், இதுவரை நடித்த படங்களில் நடிப்புக்காக பேசப்படாத அவர், அரிமா நம்பி படத்தில் ஒரு பார் சீனில் சரக்கு அடிப்பது போன்று நடித்து சர்ச்சைக்குள் சிக்கினார். மற்றபடி பெரிய அளவிலான பரபரப்பு வளையத்திற்குள் அவர் வரவில்லை.
அதோடு, அவர் பெரிதும் எதிர்பார்த்த இரும்புக்குதிரை, வை ராஜா வை போன்ற படங்கள் தோல்வியடைந்ததால் அடுத்தபடியாக ப்ரியாஆனந்துக்கு வரயிருந்த படவாய்ப்புகள் வேறு நடிகைகள் பக்கம் திரும்பி விட்டன. அதனால் தற்போது கூட்டத்தில் ஒருவன் படத்தில் மட்டுமே நடித்து வரும் ப்ரியாஆனந்த், அடுத்து மூன்று ஹீரோயினிகளில் ஒருவராக நடிக்கவும் தயாராகி விட்டார். குறிப்பாக, தற்போது கோடம்பாக்கத்தில் பேய் சீசன் நடிப்பதால், பேய் கதைகளில் நடிப்பதில் தனது ஆர்வத்தை திருப்பியிருக்கிறார். அதனால் யாராவது பேய் படங்கள் எடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டால் அவர்களை தொடர்பு கொண்டு சான்ஸ் கேட்டு வருகிறார் ப்ரியாஆனந்த்.