டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
25 வருடங்களுக்கு முன் டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் 'சாணக்யன்' என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார் கமல்ஹாசன்! மிமிக்ரியை மையமாக வைத்து த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டிருந்த இப்படம் கேரளத்தில் பெரிய வெற்றியை பெற்றது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற பெருநகரங்களிலும் 100 நாட்கள் ஓடியது. சாணக்யன் படத்தை தொடர்ந்து 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கமல்ஹாசனும், இயக்குநர் டி.கே.ராஜீவ்குமாரும் ஒரு படத்தில் இணைகின்றனர். இப்படம் ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக உருவாக இருக்கிறதாம். இப்படத்திற்கு தமிழில் 'அப்பா அம்மா விளையாட்டு' என்றும் தெலுங்கில் 'அம்மா நானா ஆட்டா' என்றும் டைட்டில் வைத்திருக்கின்றனர்.
ஹிந்தி பதிப்பிற்கான பெயர் இன்னும் முடிவாகவில்லை. 'பேசும்படம்', 'சத்யா' படங்களில் கமல்ஹாசனுடன் நடித்த அமலா அக்கினேனி இந்தப்படத்தில் கதாநாயகயாக நடிக்கிறார். வயதான கமலுக்கு ஜோடியாக, பாலிவுட் நடிகை செரீனா வாஹப் நடிக்க இருக்கிறார்! இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் உருவாக இருப்பதாக முதலில் கூறப்பட்டது. இப்போது என்ன காரணத்தினாலோ மலையாளம் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் எடுக்க திட்டமிட்டுள்ளார்கள்! இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்விருக்கிறது. 'தூங்காவனம்' படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்க உள்ள படம் இதுதான். இந்தப் படத்தை முடித்த பிறகே லிங்குசாமியின் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் கமல்.