பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ராவணன், கடல் என தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்த மணிரத்னத்துக்கு அவர் கடைசியாக இயக்கிய 'ஓகே கண்மணி' படம் வெற்றிப்படமாக அமைந்தது. ஓகே கண்மணி படத்தைத் தொடர்ந்து அடுத்து இயக்கும் படத்தின் கதையையும் இளைஞர்களை மனதில் வைத்துதான் எழுதியிருக்கிறாராம் மணிரத்னம். கார்த்தி, நான் ஈ நானி இருவரும் கதாநாயர்களாக நடிக்க இருக்கும் இப்படத்திற்கு 'வெள்ளைப் பூக்கள்' என்று டைட்டில் வைத்திருக்கிறார் மணிரத்னம்.
இந்தப்படத்தில் முதலில் 'ஓகே கண்மணி' படத்தில் நடித்த துல்கர் சல்மான்தான் கார்த்தி உடன் இணைந்து நடிக்கவிருந்தார். திட்டமிட்டபடி மணிரத்னம் படப்பிடிப்பை தொடங்காததினால் துல்கரின் கால்ஷீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், தற்போது அவருக்கு பதிலாக தெலுங்கு நடிகர் நானி ஒப்பந்தமாகியுள்ளளார். இந்தப்படத்தில் கார்த்தி, நானிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது. மணிரத்னத்தின் ஆஸ்தான் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இப்படத்துக்கும் இசை அமைக்கிறார். வெள்ளைப்பூக்கள் படத்தை தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் எடுக்க திட்டமிட்டுள்ளாராம் மணிரத்னம். தமிழ் தெலுங்கு மொழிகளுக்கு கார்த்தி, நானி இருவரையும், ஹிந்தி பதிப்புக்கு நானி, அபிஷேக் பச்சன் இருவரையும் நடிக்க வைக்க மணிரத்னம் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்.