ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
ராஜாராணி படத்தை அடுத்து விஜய்யை வைத்து அட்லீ இயக்கும் புதிய படத்துக்கு தெறி என் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தலைப்பை சற்றுமுன் ட்விட்டரில் அறிவித்தார் இயக்குநர் அட்லீ. இப்படத்துக்கு தலைப்பு வைக்காததினால் விஜய்-59 என்றே இப்படத்தைப் பற்றி ஊடகங்களில் குறிப்பிடப்பட்டு வந்தது. வெற்றி, காக்கி, மூன்று முகம் ஆகிய தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டுவருவதாகவும் இந்த 3 தலைப்புகளில் ஏதாவது ஒன்றை வைக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
ரஜினி பட டைட்டிலான மூன்று முகம் தலைப்பை பயன்படுத்த அனுமதி கிடைக்கவில்லை. காக்கி பட டைட்டில் வேறு ஒரு இயக்குநரிடம் இருந்ததால் அவரும் தர மறுத்துவிட்டதால் வெற்றி என்ற தலைப்பை அட்லீ சிபாரிசு செய்ததாகவும் அதை விஜய் விரும்பவில்லை என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் அப்படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமார் ஒரு பேட்டியில், “அட்லி டைரக்ஷன்ல விஜய் சாரோட தாறுமாறு படத்துக்கு மறுபடியும் மியூசிக் பண்றதுல ரொம்ப சந்தோஷம்” என்று சொல்லிவிட்டார். இதனால் விஜய் படத்தின் பெயர் தாறுமாறு என்ற ரகசியம் வெளியானது.
மிகப்பெரிய பில்ட்அப் கொடுத்து டைட்டிலை அறிவிக்க நினைத்திருந்த அட்லீ, பேட்டியில் ஜி.வி.பிரகாஷ்குமார் உளறியதை அறிந்து அப்செட்டாகிவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தாறு மாறு என்ற தலைப்பை கைவிட்டு தற்போது தெறி என்ற தலைப்பை சூட்டியுள்ளார்.