'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபத்தில் மலையாளத்தில் பிருத்விராஜ், இந்திரஜித், ஜெயசூர்யா மூவர் நடிப்பில் மல்டி ஸ்டாரர் படமாக வெளியான 'அமர் அக்பர் ஆண்டனி' படம் கிட்டத்தட்ட 3௦ கோடி ரூபாய்களுக்கு மேல் வசூலித்து இன்னும் சில இடங்களில் வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கிறது. இந்தப்படத்தை இயக்கியவர் நாடக நடிகராக இருந்து இயக்குனராக புரமோஷன் பெற்ற நாதிர்ஷா. இவர் நடிகர் திலீப்பிற்கு பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்.. ஆனால் தான் இயக்கிய முதல் படத்தில் திலீப்பை நடிக்க வைக்காமல், எதற்காக பிருத்விராஜை ஹீரோவாக்கினார் என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்தது..
இதையேதான் நாதிர்ஷாவுக்கு வேண்டாத சில நபர்கள், “இது சும்மா காமெடியான கதை, அவரது நண்பர் திலீப்பையே இந்த கதையால் திருப்திப்படுத்த முடியவில்லையே” என பலவாறு சொல்லி பிருத்விராஜை பிரெய்ன் வாஷ் பண்ணி, இந்தப்படத்தை ஒப்புக்கொள்ள விடாமல் தடுத்தார்களாம். ஆனால் பிருத்விராஜ் அவற்றையெல்லாம் ஒதுக்கித்தள்ளிவிட்டு இந்தப்படத்தை நம்பிக்கையாக ஒப்புக்கொண்டாராம். இந்தப்படத்தில் திலீப்பை நடிக்க வைக்காததற்கு காரணம், படத்தில் அவருக்கு ஏற்றார்போல கேரக்டர் இல்லை என்பதுதானாம். இதை திலீப்பும் நன்றாகவே புரிந்துகொண்டுள்ளார் என்பதுதான் படத்தின் வெற்றிக்கு அவர் சொன்ன வாழ்த்து என்கிறார் இயக்குனர் நாதிர்ஷா.