தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் சங்கம் பற்றி அவதூறு பேசியதாக வடிவேலு மீது தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது. நடிகர் சங்கத்திற்கு கடந்த செப்.18ம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு முன்பாக சரத்குமார் அணியும், விஷால் அணியும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் காரசாரமாக குற்றச்சாட்டுகளை சொல்லி வந்தனர். விஷால் அணிக்கு ஆதரவாக வடிவேலுவும் களமிறங்கினார். அப்போது பேசிய வடிவேலு நடிகர் சங்கத்தை காணவில்லை என்று தன் பட டயலாக்குளை போன்று அள்ளிவிட்டார். இந்தச்சூழலில் நடிகர் சங்கம் தொடர்பாக அவதூறு பேசியதாக அய்யாவு என்பவர் வடிவேலு மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் வடிவேலு, நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து நடிகர் வடிவேலு, சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார். வடிவேலுவின் மனுவை விசாரித்த நீதிபதி சுப்பையா, நாமக்கலில் நடைபெறும் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக இடைக்கால தடைவதித்து உத்தரவிட்டார்.