தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வருபவர்களுக்கு வரவேற்பு இல்லாமல் இருந்து வந்த நிலையில், விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்து ஒரு முன்னணி ஹீரோ அந்தஸ்தை எட்டிப்பிடித்தவர் சிவகார்த்திகேயன். மெரினா, மனம் கொத்திப்பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா என்று தனது சினிமா பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான்கராத்தே, காக்கி சட்டை படங்களுக்குப்பிறகு கமர்சியல் ஹீரோ அந்தஸ்தை பிடித்தார். தற்போது ரஜினி முருகன் படத்தில் நடித்து முடித்து விட்டு, பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் ஒரு பெண் நர்ஸ் கெட்டப்பிலும் நடிக்கிறார் அவர். மேலும், இதுவரை ரொமான்ஸ் மற்றும் காமெடி கதைகளாக தேர்வு செய்து நடித்து வந்த சிவகார்த்திகேயன், இனிமேல் நடிக்கும் படங்களில் வித்தியாசமாக என்னை வெளிப்படுத்தி அடுத்த தளத்துக்கு செல்ல வேண்டும் என்கிற முயற்சிகளில் இறங்கி விட்டார்.
அதன்காரணமாக, தனது படங்களில் இடம்பெறும் டெக்னீஷியன்களும் பிரபலமானவர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் சிவகார்த்திகேயன் தனது புதிய படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமை இணைத்திருப்பவர், வேறு சில பிரபல டெக்னீஷியன்களையும் இணைத்திருக்கிறாராம். மேலும் அடுத்தபடியாக நடிக்கவும் கதைகள் கேட்டு வருகிறார். தன்னிடம் கதை சொல்லும் டைரக்டர்களிடம் இந்த படத்திற்கான டெக்னீஷியன்களை நான்தான் முடிவெடுப்பேன். நான் சொல்லும் நபர்களைத்தான் புக் பண்ண வேண்டும் என்கிறாராம். தனது கண்டிசன்களுக்கு உடன்படும் டைரக்டர்களுக்கு மட்டுமே கால்சீட் தருவதற்கு ஒப்புதல் வழங்குகிறாராம் சிவகார்த்திகேயன்.