600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
பார்வை ஒன்றே போதுமே' உட்பட சில படங்களை இயக்கிய முரளி கிருஷ்ணா இயக்கும் நேர்முகம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் மீனாட்சி. கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் அறிமுகமான மீனாட்சியால் கதாநாயகியாக தாக்குப்பிடிக்க முடியவில்லை. நானும் ரௌடிதான் படத்தில் ஒரு பாட்டுக்கு குத்துப்பாட்டு ஆடும் நிலைக்குத்தள்ளப்பட்டார். எனவே தான் சர்வைவலுக்காக 'நேர்முகம்' என்ற படத்தில் புதுமுக ஹீரோ உடன் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் 'நேர்முகம்' படத்தின் படப்பிடிப்பின்போது, அந்தப் படத்தில் வேலை செய்யும் உதவி இயக்குநர் ஒருவரை அடித்துவிட்டதாக சில தினங்களுக்கு முன் சர்ச்சையில் சிக்கினார் மீனாட்சி. குறிப்பிட்ட உதவி இயக்குநர் தன்னை நோக்கி கையை நீட்டி, ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தைப் பார்த்ததும், அவர் தன்னை கிண்டல் செய்வதாக நினைத்த மீனாட்சி அவரை அடித்துவிட்டதாக சொல்லப்பட்டது.
உண்மையில் நடந்ததோ வேறு. கேரவானுக்குள் மீனாட்சி சிகரெட் பிடித்துக் கொண்டிருந்ததாகவும், கதவைத்தட்டாமல் அந்த உதவி இயக்குநர் விருட்டென உள்ளே வர.. அந்தக் கடுப்பில்தான் கையை நீட்டி இருக்கிறார் மீனாட்சி. இந்தப் பிரச்சனையில், மீனாட்சியை கேரவனுக்குள் வைத்துப் பூட்டிய அப்படத்தின் இயக்குநர் உட்பட படக்குழுவினர் மீனாட்சியை மிரட்டி அவரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி இருக்கின்றனர்.
மீனாட்சியிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கியது மட்டுமல்ல, அந்தக் கடிதத்தை கையில் பிடித்தபடி அவரை போஸ் கொடுக்க வைத்து அதை மீடியாவுக்கும் அனுப்பி வைத்தனர். உதவி இயக்குநரை மீனாட்சி அடித்த செய்தியும்... அவரிடமிருந்து மன்னிப்பு கடிதம் வாங்கிய செய்தியும் சில நிமிடங்களில் மீடியாக்களில் செய்தியானது. இத்தனை நடந்தும் கூட, நடிகர் சங்கம் சார்பாக மீனாட்சியிடம் ஒருத்தர் கூட என்ன நடந்தது என்று விசாரிக்கவில்லை. இத்தனைக்கும் மீனாட்சி நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர். நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. அதனாலோ என்னவோ, சக நடிகைக்கு ஏற்பட்ட பிரச்சனையைப் பற்றிக்கூட கேட்க நேரமில்லை போலிருக்கிறது.