சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
மியூசிக் சேனல் தொகுப்பாளினி அஞ்சனா, எல்லோருக்கும் பிடித்த க்யூட்டான சிம்பிளான தொகுப்பாளினி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தவிர பொது நிகழ்ச்சியிலும் நல்ல தொகுப்பாளினியாக வளர்ந்து வருகிறார். திவ்யதர்ஷினி, ரம்யா இடத்தை பிடிப்பார் என்று கணிக்கப்படுகிறவர். இப்போது அவர்களைப்போலவே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இதில் முன்னவர்கள் இருவரும் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்தார்கள். அஞ்சனா காதல் திருமணம் செய்கிறார்.
கயல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். வருகிற 29ந் தேதி திருமண நிச்சயம், நடக்க இருக்கிறது. ஏப்ரல் மாதம் திருமணம் நடக்கிறது. டுவிட்டரில் காதல் வளர்த்தோம் என்கிறார் அஞ்சனா.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: பொதுவாக நான் எல்லோருடனும் எளிதில் பழகிவிடுவேன். என் கலகல பேச்சு அவர்களுக்கும் பிடித்து விடும். அப்படி வந்த நண்பர்கள் நிறைய இருக்கிறார்கள். நட்பை தாண்டி வேறு எதையும் நான் யோசிப்பதில்லை. ஆனால் சந்திரன் விஷயத்தில் மட்டும் அது மாறிவிட்டது. இருவரும் ஒரு விருது வழங்கும் விழாவில்தான் அறிமுகமானோம். நான் தொகுத்து வழங்கினேன். அவர் கயல் படத்துக்காக விருது வாங்கினார். அவர் நடிப்பை பற்றி நான் சிலாகித்து சொன்னது அவருக்கு பிடித்திருந்ததால் சின்னதாக ஒரு நன்றி சொன்னார்.
அதன் பிறகு சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போது பேசிக் கொண்டோம். அப்புறம் பேஸ்புக் டுவிட்டர் மூலம் எங்கள் நட்பு காதலானது. அவரே நேடியாக கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டார். இவ்வளவு வெளிப்படையாக இருக்கிறவரை மிஸ் பண்ண முடியுமா ஓகே சொன்னேன். வீட்டில் விஷயத்தை சொன்னேன். அவர்களும் உன் விருப்பமே எங்கள் விருப்பம் என்றார்கள். இப்போது கல்யாண ஏற்பாடுகளில் வந்து நிற்கிறோம். திருமணத்துக்கு பிறகும் எனது தொகுப்பாளினி பணி தொடரும் என்கிறார் அஞ்சனா.