கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் |
நடிகர் ஆர்யா - நடிகை அனுஷ்கா நடித்த, இஞ்சி இடுப்பழகி படம், நவ., 27ல் திரைக்கு வருகிறது. இப்படத்தின் விளம்பரத்திற்காக சென்னை வந்த நடிகை அனுஷ்கா, நமது நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
இஞ்சி இடுப்பழகி உட்பட, நடிக்கும் படங்களை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?
இந்த மாதிரி கதை தான் இருக்க வேண்டும் என, எண்ணி தேர்ந்தெடுப்பது இல்லை. எனக்கு பிடித்த நல்ல கதையம்சம் இருந்தால் போதும். அதுபோல் தான், பாகுபலி, இஞ்சி இடுப்பழகி படங்களை தேர்ந்தெடுத்தது. இஞ்சி இடுப்பழகி படம் எல்லா பெண்களுக்கும் பிடிக்கும். படத்தில்
நான் நடித்துள்ளது அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம்.
நடிகர்கள் மட்டுமே உடலை வருத்தி நடிக்கும் திரைத்துறையில், நடிகையாகிய நீங்களும் அந்த மாதிரி நடித்தது பற்றி?
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக, முதலில், போட்டோ ஷூட் எடுத்த போது, பொருத்தமாக அமையவில்லை. மேக்கப் மற்றும் ஆடை வடிவமைப்பால் சரி செய்யலாம் என்றனர்; எனக்கு அதில் திருப்தி வரவில்லை. சிலர் அதிக, மேக்கப் ஆபத்தை விளைவிக்கலாம் என்றனர். அதேவேளையில், உடல் எடையை கூட்டுவதாலும் பாதிப்பு வரலாம் என்றனர். ஆனால், கதைக்கு ஏற்றபடி உடல் எடையை கூட்டுவது தான் சரியாக இருக்கும் என, உணர்ந்தேன். இப்படத்திற்காக, மூன்று மாதங்களில், 17 கிலோ வரை எடையை கூட்டினேன்.
உடல் எடையை கூட்டுவது, குறைப்பது இதில் எது கஷ்டம்?
இரண்டுமே கஷ்டம் தான்.
இஞ்சி இடுப்பழகியில் ஏதாவது, மெசேஜ் சொல்லப்படுகிறதா?
மெசேஜ் எதுவும் தனியாக இல்லை. குண்டோ, ஒல்லியோ எப்படி இருந்தாலும் அழகு தான். உடல் தோற்றம் அழகு இல்லை; நல்ல மனது தான் அழகு.
நடிக்க வராவிட்டால் என்னவாகிஇருப்பீர்கள்?
நான், 17 வயது முதல் யோகா செய்து வருகிறேன். நடிக்க வராவிட்டால், யோகா டீச்சராகி இருப்பேன்.
விக்ரம், சூர்யா, ஆர்யா, பிரபாஸ் இவர்களில் யார் உங்களுக்கு ஏற்ற நடிகராக நினைக்கிறீர்கள்?
நீங்கள் குறிப்பிட்ட நால்வருமே எனக்கு நல்ல நண்பர்கள். விக்ரம், சூர்யா சீனியர் நடிகர்கள். சூர்யா, யூனிட்டில் எல்லாரையும் மதிப்பார். எனக்கு சந்தேகம் வரும்போது, விக்ரமிடம் நிறைய ஆலோசித்துள்ளேன்.
சினிமாவில் யாரிடம் அதிகம் கற்றுள்ளீர்கள்?
ரஜினியிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அவரது நடிப்பு மற்றும் பொது வாழ்க்கை என்னை ரொம்பவே ஈர்த்தது. சூப்பர் ஸ்டாராக இருந்தும், அவரது எளிமை மிகவும் பிடித்தது. அதே போல், மனோரமா. அவருடன், அருந்ததி படத்தில் நடித்த போது, நடிப்பில் அவருக்கு உள்ள ஈடுபாடு என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்துள்ளீர்கள். எந்த மாநில ரசிகர்கள் உங்களுக்கு விருப்பம்?
எந்த கதை என்றாலும், பிடித்தால் மட்டுமே நடிப்பேன். என்னை ஜெயிக்க வைப்பது ரசிகர்கள் தான்; இதில் வேறுபாடு கிடையாது.
சினிமாவில், 10 ஆண்டுகளாக இருக்கிறீர்கள். எதிர்காலத்தில் எந்த மாதிரியான, ரோலில் நடிக்க விருப்பம்?
எல்லாருமே, பிளாக் பஸ்டர் மூவி ரோலில் நடிக்கவே ஆசைப்படுவர். அந்த மாதிரி கதை இருந்தால் சொல்லுங்கள். சினிமா என்பது மாயாஜால உலகம். எப்போது என்ன நடக்கும் என, தெரியாது. நான் சினிமாவுக்கு வருவேன் என்பதே தெரியாது; எல்லாம் கடவுள் விருப்பம்.
உங்கள் உயரம் உங்களுக்கு பிடித்துள்ளதா?
கண்டிப்பாக! உயரமாக இருப்பதால் வருத்தப்பட்டது இல்லை. இதனால், சில, கேரக்டர்கள் வராமல் போயிருக்கலாம்; அதுபற்றி கவலை இல்லை.
சினிமாவில் நடிகையரிடையே போட்டி அதிகரித்துள்ளதா?
போட்டி கண்டிப்பாக தேவை. அப்போது தான் சிறந்த பங்களிப்பை தர முடியும். நம்பர் - 1 போட்டியில் எனக்கு நம்பிக்கை இல்லை. நம்பர் - 1 என்றால் ஏதாவது கூடுதல் லாபமா? இல்லையே. நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்தாலே போதும். வரிசையாக எனக்கு நல்ல கதையம்சம் உள்ள படங்களாக அமைந்தது சந்தோஷமாக உள்ளது.
பாகுபலி - 2 படம் எப்படி இருக்கும்?
பாகுபலி - 2 படம் உலக அளவில் கொண்டு செல்லும் படமாக இருக்கும்; படப்பிடிப்பு டிசம்பரில் ஆரம்பமாகிறது.
அடுத்து வர உள்ள படங்கள் என்ன?
பாகுபலி - 2, சிங்கம் - 3 படங்கள் வர உள்ளன.
நீங்கள் நடித்த படங்களில், சிறந்த படங்களை எப்படி வரிசைப்படுத்துவீர்கள்?
முதலில் நாகார்ஜுனாவுடன் நடித்த, சூப்பர் படம், அடுத்ததாக, வேதம், தெய்வத்திருமகள், அருந்ததி, ருத்ரமாதேவி மற்றும், பாகுபலி படங்களை கூறலாம்.