தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்த வருடம் முதன்முறையாக கேரளாவில் நடைபெற்று வருகிறது 'ஆல் லைட்ஸ் இண்டியா இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல்' (ALIIFF) திரைப்பட விழா. பலநாட்டு கலைஞர்கள் திரளாக கலந்துகொண்டு பங்கேற்று வரும் இந்த விழாவில் அதன் முதல் நாளன்று ஒரு மெகா பட்ஜெட் படத்திற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகி மலையாள ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சுமார் 75 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்தப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் ஐ.வி.சசி மற்றும் 'டேம் 999' படத்தை இயக்கிய சோஹன் ராய் இருவரும் இணைந்து இயக்குகின்றனர்.
தனது 66 வயதில் கிட்டத்தட்ட 13௦ படங்களை இயக்கியுள்ள ஐ.வி.சசி மலையாள திரையுலகில் நாற்பது வருட வெற்றி வரலாறு கொண்ட இயக்குனர். சோஹன் ராயோ 'டேம் 999' என்கிற சர்ச்சைக்குரிய படத்தை இயக்கியவர்.. கூடுதலாக அந்தப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடைவிதிக்கும் நீதிமன்ற குட்டுக்கும் ஆளாகி எதிர்மறையாக புகழ்பெற்றவர்.
தொண்ணூறுகளில் குவைத்தில் உள்ள எண்ணெய் கிணறுகளை கைப்பற்ற நடைபெற்ற போரை பின்னணியாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம். படத்திற்கு 'எரியும் கிணறுகள்' (Burning Wells) என பொருத்தமான பெயரையும் வைத்துள்ளார்கள்.