இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கலக்க போவது யாரு நிகழ்ச்சிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு பங்கேற்பாளராக வந்த ஈரோடு மகேஷ் இப்போது அந்த நிகழ்ச்சியின் நடுவர் என்ற நிலைக்கு வளர்ந்திருக்கிறார். இதுதவிர நடுவுல கொஞ்சம் டிஸ்ட்ர்ப் பண்ணுவோம் என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். சந்தானம், சிவகார்த்திகேயன் வரிசையில் மகேசுக்கும் சினிமா ஆசை வந்தது. பல படங்களில் காமெடியானக நடித்தார். குறிப்பாக சட்டம் ஒரு இருட்டரை 2, சும்மா நச்சுன்னு இருக்கு படங்களில் முழுநீள காமெடியனாக நடித்தார் என்றாலும் சிகரம் தொடு படத்தில் விக்ரம்பிரபு நண்பனாக நடித்தது அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
தற்போது ஜம்புலிங்கம் என்ற 3டி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழியில் தயாராகும் இந்தப் படம் தனக்கு நல்ல திருப்பம் தரும் என்று நம்புகிறார் மகேஷ். எல்லோரையும் போன்று அடுத்து ஹீரோவாகும் முயற்சியில் இருக்கிறார். நான்கைந்து கதைகள் கேட்டிருக்கிறார். விரைவில் ஈரோடு மகேஷ் ஹீரோவானார் என்கிற செய்தி வரும்.