இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மதயானைக்கூட்டம், கிருமி போன்ற படங்களில் நடித்தவர் கதிர். இப்போது காக்கா முட்டை படத்தில் அசோசியேட்டாக ஒர்க் பண்ணிய ஜெகதீசன் சுப்பு இயக்கும் சிகை மற்றும் அருண் கிருஷ்ணசாமி இயக்கும் என்னோடு விளையாடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சிகை படத்தில் வித்தியாசமான பெண் வேடத்தில் கதிர் நடித்து வருகிறார்.
அந்த வேடம் பற்றி தினமலர் இணையதளத்திற்காக கதிர் அளித்த பிரத்யேக பேட்டி...
மதயானைக்கூட்டம், கிருமி படங்களுக்குப்பிறகு நான் நடிக்கும் வித்தியாசமான படம் இந்த சிகை. இந்த படத்தில் என்னோடு சேர்த்து ராஜ்பரத், மயில்சாமி, ஸ்ருதி ராமகிருஷ்ணன், மீரா நாயர் உள்பட 9 பேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 24 மணி நேரத்தில் நடிக்கும் ஒரு க்ரைம் திரில்லர் கதையில் இந்த படம் உருவாகியுள்ளது. இதுவரை 70 சதவிகிதம் படப்பிடிப்பு நடந்துள்ளது. மேலும் இது வழக்கமான சினிமாவாக இல்லாமல் ஒரு மாறுபட்ட கதையம்சம் கொண்டது. கதை நடந்து கொண்டிருக்கும்போது படம் தொடங்கும். போகப்போகத்தான் என்ன நடந்தது என்பது தெரிய வரும். படம் பார்க்கிற ரசிகர்களுக்கு புதிய அனுபவமாகவும் அதே சமயம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் கதையோட்டமும், அதை சொல்லும விதமும் இருக்கும். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் இந்த மாதிரி கதை இதுவரை தமிழ் சினிமாவில் வந்ததே இல்லை. அப்படியொரு வித்தியாசமான கதையில் நடிக்கிறேன்.
அதோடு, என்னைப்பொறுத்தவரை எந்தவொரு படத்தில் நடித்தாலும் அதில் ஏதாவது புதுசாக சொல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதனால் ஆடியன்ஸ் மனநிலையில் கதை கேட்கிறேன். காரணம் இன்றைய ரசிகர்களின் ரசனை ரொம்ப மாறி விட்டது. கமர்சியல் என்பதை விட கதைக்களம் புதுமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். காக்கா முட்டை போன்ற படங்களின் வெற்றியே இதற்கு சாட்சி. அதனால்தான் சவாலான கதைகள் பக்கம் என் கவனம் திரும்பி நிற்கிறது.
மேலும் இந்த படத்தில் நான் பெண் வேடத்தில் நடிக்கும் கெட்டப் வெளியான பிறகு படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. ஆனால் இந்த படம் முழுக்க நான் பெண் வேடத்தில் நடிக்கவில்லை. அது ஒரு 3 நிமிடம்தான் வரும். எதற்காக அப்படி மாறுகிறேன் என்பது சஸ்பென்ஸ். அந்த கெட்டப்புக்காக 4 கிலோ வெயிட் போட்டேன். ஒருவரின் தலையில் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் வைத்தாலே அவர்களின் தோற்றம் மாறி விடும். அந்த வகையில், இந்த படத்தில் சிகை அலங்காரத்தினால் பல புதிய தோற்றங்கள் வெளிப்படும்.
அதோடு, படத்தில் கதையோடு கலந்த ஒரு மெசேஜ் உள்ளது. அதை டைரக்டர் சொல்லும் விதம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால் இந்த சிகை படம் என்னைப்போலவே ரசிகர்களுக்கும் ரொம்ப பிடிக்கும். காமெடி நடிகர் மயில்சாமி காமெடி செய்தாலும் கிருமி படத்தில் சார்லி நடித்தது போன்று அவருக்கு இந்த சிகை படத்தில் ஒரு முக்கியமான வேடம். இதுமாதிரி படத்தில் நடிக்கும் ஒவ்வொருவருக்குமே முக்கியத்துவம் உள்ளது. அதனால் எனக்கு எப்படி இந்த சிகை படம் முக்கியமானதோ அதேபோல் தமிழ் சினிமாவிற்கும் இது ஒரு முக்கியமான புதுமையான படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார் கதிர்.