வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சினிமாவை ரசிப்பவர்களுக்கும், சினிமாவை படைப்பவர்களுக்கும் அது ஒரு சுகமான போதைதான். அவர்களிருவருமே அதை விடவே மாட்டார்கள். சிலருக்கெல்லாம் வாரத்திற்கு நான்கைந்து படங்களைப் பார்க்கும் பழக்கம் இருப்பதையும் பார்த்திருக்கிறோம். பலர் வாரம் ஒரு முறையாவது ஒரு படத்தைப் பார்த்து விடுவோம். இன்னும் பலரோ டிவியில் தினமும் பல படங்களைப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள். பார்ப்பவர்களுக்கே அப்படிப் பார்க்கத் தூண்டும் போது 'படம்' எடுத்தவர்களுக்கு எப்படியிருக்கும். அப்படி ஒரு சிக்கலில் தற்போது பார்த்திபன் மாட்டிக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் சந்தித்த போது இனி படத்தைத் தயாரிக்கும் எண்ணமில்லை என்றவர் தற்போது படமெடுக்க பைனான்சியரை அணுக ஆரம்பித்துவிட்டது. இதை அவரே அவருடைய நடையில் சொல்லியிருக்கிறார். 'நானும் ரௌடிதான்' படத்திற்காக அவருக்குக் கிடைக்கும் பாராட்டுக்கள் அவரை அப்படி மாற்றிவிட்டிருக்கிறது.
“வழிய மறிச்சி
கார நிறுத்தி
பட்டன அமுக்கி
lift-ட நிறுத்தி
மொபைல்-ல சாய்ச்சி
செல்பி புடிச்சி
ஸெல்ப் எடுக்காத வண்டிய
இதயம் மக்கராயி
கண்ணும் மக்கி போயி
ஆனந்த கண்ணீரோட - ரசிகர்களின்
அன்பு கரைந்தோட....
அதோட நிக்காம
அமலா பால் வேற
கட்டிப் பிடிச்சி 'killer
Great killer” என
உள்நெஞ்சைக் கிள்ளி
கிள்ளிவளவனை
பாராட்டி விட்டு
மீண்டும் NRD
பார்க்க ஓடியதைப் பார்க்க...
பாராட்டு-கைதட்டல்-விசில்
மூணும் மகுடிதான்
மயங்கும் மனசு பாம்புதான்
மீண்டும் மீண்டும்
படமெடுக்க வேண்டும் தான்
என்று வீம்பும் நோண்டியது
பைனான்சியர் தொலைபேசி
எண்ணை! ,
என தனக்குக் கிடைத்தப் பாராட்டை அவருடைய நடையிலேயே கவிதையாகப் பதிவு செய்திருக்கிறார் பார்த்திபன். ஆக, விரைவில் அவரிடமிருந்து ஒரு படத்தை எதிர்பார்க்கலாம்.