பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சென்னை: விஷால் அணி குறித்து தவறாக பேசுவதை, தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலர் ராதாரவி நிறுத்த வேண்டும், என, நடிகர் நாசர் ஆவேசமாக கூறினார்.
சென்னை, கே.கே.நகர், ஜெயா திருமண மண்டபத்தில், நடிகர் விஷாலின், பாண்டவர் அணி சார்பில், அவசர ஆலோசனை கூட்டம், நேற்று மாலை நடந்தது. இதில் நடிகர்கள், நாசர், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் உட்பட, 579 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், நாசர் பேசியதாவது:நடிகர் சங்கத் தேர்தல் பிரசாரம் பரபரப்பாகி விட்டது. சங்கத்தை நடத்துவதை விட, மிக கடினமானது தேர்தலை நடத்துவது; தேர்தலை கண்ணியமாக நடத்த முயற்சி செய்து வருகிறோம். எதிர் அணியினர் எதையாவது பேசி, பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.வெற்றிக்கு, ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என்பதால், கேரளா, கர்நாடகா, மும்பையில் இருப்பவர்களை தேடி சென்று ஓட்டு வேட்டை நடத்தியுள்ளோம். தேர்தலில் மாற்றம் தேவை; நிச்சயம், நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.எங்கள் அணி குறித்து, ராதாரவி பொய் பேசுவதையும், தவறாக பேசுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவரது செயல்கள் சரிதானா என்பதை, அவரே ஒரு முறை யோசித்தால், மற்றவர்களை தவறாக பேசமாட்டார். ஆனால், அவர் எதைப்பற்றியும் யோசிப்பதில்லை.சங்கத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான், தேர்தலில் போட்டியிடுகிறோம். எங்கள் அணி குறித்த, ராதாரவியின் அராஜக பேச்சுக்கு, தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும். இவ்வாறு நாசர் பேசினார்.
நடிகர் விஷால் பேசியதாவது:நடிகர் சங்கத் தேர்தலில், சினிமா சங்கங்கள் நடுநிலை வகிக்கின்றன. தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம், சரத்குமார் அணிக்கு ஆதரவு தரும் என, அதன் தலைவர் தாணு எடுத்த முடிவுக்கு, பிற தயாரிப்பாளர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததை பார்த்திருப்பீர்கள்.நடிகர் சங்கத்தில் பல குளறுபடிகள் நடந்துள்ளன; தேர்தலில், நிச்சயம் நமது அணி வெற்றி பெறும். சங்க முன்னேற்றத்திற்கு அனைத்தும் செய்வோம். தற்போது, படம் எடுக்கும் தயாரிப்பாளர்களும், படங்களில் நடிக்கும் நடிகர்களும் நமக்கு ஆதரவாக உள்ளனர். திரையுலகத்தினர், நடிகர் சங்கத்தில் மாற்றம் வரவேண்டும் என, உறுதியாக இருக்கின்றனர்; நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்.இவ்வாறு விஷால் பேசினார்.