'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மூன்று ஆண்டு போராட்டத்திற்கு பிறகு சிம்பு நடித்த வாலு படம் திரைக்கு வந்தது. பெரிய வெற்றி இல்லை என்றாலும், படம் திரைக்கு வந்ததே சிம்புவைப் பொறுத்தவரை பெரிய சாதனையாக இருந்தது. அதையடுத்து மாஜி காதலி நயன்தாராவுடன் நடித்த இது நம்ம ஆளு படத்தை வெளியிடவும் ஆர்வம் காட்டினார். ஆனால் பைனான்ஸ் பிரச்சினை இருந்ததால் கெளதம்மேனன், செல்வராகவன் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
அப்படி அவர் நடித்து வந்ததில் செல்வராகவனின் கான் படம் ஆரம்பத்தில் வேகமெடுத்தபோதும், இப்போது திடீரென்று பைனான்ஸ் பிரச்சினை காரணமாக வேகம் குறைந்து நின்று கொண்டிருக்கிறது. அதனால் தனது மனைவி இயக்கி வரும் மாலை நேரத்து மயக்கம் பட வேலைகளில் கவனத்தை திசைதிருப்பிவிட்டார் செல்வராகவன். இந்த நிலையில் அப்படம் கைவிடப்பட்டதாக செய்திகள் புகையத் தொடங்கியது.
அதையடுத்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பைனான்ஸ் பிரச்சினை காரணமாக கான் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சிலகாலம் கழித்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும். கான் படக்கதை எனக்கு மிகவும் பிடித்தமானது. அதோடு அந்த கதைக்கு சிம்பு தனது நடிப்பால் அற்புதமாக உயிர் கொடுத்து வந்தார். அந்தவகையில், அவரை விட்டு தற்காலிகமாக பிரிவது எனக்கு மனதளவில் வருத்தத்தை அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார் செல்வராகவன்.