தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில் நீதிபதி கைலாசத்தின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நீதிபதி எஸ்.கே.கவுல், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய வைரமுத்து, நீதிமன்றத்தை சமூகம் கவனிக்கிறது, நீதிபதிகள் ஓய்வு பெறுவதற்கு முன்னர் விலைபோவதை ஏற்க முடியவில்லை, காவல்துறை, நீதித்துறை உள்ளிட்ட துறைகள் களங்கம் ஏற்படாமல் இருந்தால் தான் சமூகம் மேம்படும் என்று பேசினார்.
வைரமுத்துவின் இந்த பேச்சு கோர்ட்டை அவமதிக்கும் செயல் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் சினிமா பைனான்சியர் முகுன் சந்த் போத்ரா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அக்னி கோத்திரி, கே.கே. சசிதரன் ஆகியோர், இம்மனுவுடன் இணைத்துள்ள சி.டி.யை போட்டு பார்த்தார்கள். இம்மனு விசாரணைக்கு உகந்ததுதான். ஆகையால் இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிடுகிறோம் என உத்தரவிட்டனர்.