தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் சில விஷயங்கள் யதார்த்தமாக சுவாரஸ்யமாக நடந்துவிடும்.. நமக்கு கேட்பதற்கு சிரிப்பாக இருந்தாலும் கூட அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சங்கடம், சந்தோசம் இரண்டுமே கலந்திருக்கும் என்பதுதான் உண்மை. மலையாள நடிகர் பிருத்விராஜுக்கும் இந்த இரண்டு அனுபவங்களுமே ஏற்பட்டுள்ளன. உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியாக நடித்த பாக்கியவாங்களில் பிருத்விராஜும் ஒருவர் அல்லவா..? ஐந்து வருடங்களுக்கு முன் ராவணன் படத்தில் அவருடன் நடித்தபோது, “நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது இருந்து உங்களின் தீவிர ரசிகன்” என ஐஸ்வர்யாவிடம் சொல்லி சந்தோஷப்பட்டார் பிருத்விராஜ்.
அவருக்குத்தான் அது சந்தோசம்.. ஆனால் தன்னை விட பத்துவயது குறைந்த பிருத்விராஜுடன் ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா அதைக்கேட்டு சங்கடத்தில் ஆழ்ந்துவிட்டாராம். ஆனால் இதேபோன்ற சங்கடம் பிருத்விராஜுக்கும் ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன் பிருத்விராஜ் நடித்துள்ள 'அமர் அக்பர் ஆண்டனி' படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போதுதான் இந்த விஷயத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நமீதா பிரமோத் தான் மூன்றாவது படிக்கும்போது இருந்து பிருத்விராஜின் ரசிகை அவரிடம் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினாராம்.. உண்மைதான். பிருத்விராஜை விட 13 வயது குறைந்தவர் நமீதா.
அடுத்து பிருத்விராஜ் பேசும்போது இதைக்குறிப்பிட்டு, “நமீதா சொன்னதை கேட்டதும் எனக்கு கொஞ்சம் ஷாக்காகத்தான் இருந்தது. என்னடா நமக்கு அவ்வளவு வயசு ஆகிவிட்டதா என்று. ஆனால் நானும் இதே போல ஐஸ்வர்யா ராயிடம் சொன்னபோது அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை இப்போது யூகிக்க முடிகிறது” என்றார்