திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
நடிகர் விஷாலும், ஆர்யாவும் நெருங்கிய நண்பர்கள் என்பது ஊரறிந்த விஷயம். இருவரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கலாய்த்துக் கொள்வார்கள். தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல, பொது நிகழ்ச்சிகளிலும் ஒருவருக்கொருவர் வாரிக்கொள்ள தயங்கவே மாட்டார்கள். சக நடிகைகள் விஷயத்தில் ஆர்யா எப்பேற்பட்ட ஜொள்ளுப் பார்ட்டி என்பதை போட்டு உடைத்ததே விஷால்தான். அதேபோல் விஷாலுக்கும் லட்சுமிமேனனுக்கும் கெமிஸ்ட்ரி இருப்பதை போகிறபோக்கில் போட்டுத்தாக்கியதும் ஆர்யாதான். இப்படி விஷாலும் ஆரியாவும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஒருவருக்கொருவர் கலாய்த்துக்கொள்வார்கள்.
லேட்டஸ்ட்டாக ஒரு விழாவில் ஆர்யாவை செமத்தியாய் கலாய்த்தார் விஷால். மறைந்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் முதலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையிலுள்ளா காமராஜர் அரங்கில் நடைபெற்றது. திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசும்போது ஒரு சம்பவத்தை சொன்னார்.
'அவன் இவன்' படத்தின் படபிடிப்பில் இருக்கும்போது ஆர்யா என்னிடம் சத்தியஜித் ரே அவர்களை பற்றி நான் ஒரு நாள் பேசியதை நினைவில் வைத்து 'சத்யஜோதி' நிறுவனத்தை நினைவு கூர்ந்து பேசினார். நிஜமாகவே அவருக்கு சத்தியஜித் ரேயை தெரியவில்லை. அதேபோல் ஆர்யா, நடிகை அம்பிகாவை புதுமுகமா என்று ஒரு நாள் கேட்டு என்னை அதிர வைத்தார்.” என்று ஆர்யாவின் பொது அறிவு பற்றி விஷால் பேசியபோது எஸ்.எஸ்.ஆரின் நினைவேந்தல் நிகழ்ச்சி கலகலப்பாக மாறியது.