சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் |
'அட்டகத்தி' படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு பெரிய அடையாளம் கொடுத்தது காக்கா முட்டை. தற்போது அவர் குஷ்பு தயாரிக்கும், 'ஹலோ நான் பேய் பேசுறேன்',,'தீபாவளி துப்பாக்கி', 'குற்றமே தண்டனை' படங்களில் நடித்து முடித்து விட்டார். அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'என்னென்றும் புன்னகை' அகமது இயக்கத்தில் தயாராகும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதுதவிர 'ஈரம்', 'வல்லினம்' படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கும் ''ஆறாது சினம்'' படத்தில் அருள்நிதி ஜோடியாக நடிக்கிறார். ஒரே நேரத்தில் அண்ணன் உதயநிதியுடனும், தம்பி அருள்நிதியுடனும் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் ஐஸ்வர்யா.
"என்னை பொருத்தவரை கேரக்டர்களுக்குத்தான் முக்கியத்துவம். உடன் யார் நடிக்கிறார்கள் என்று பார்க்க மாட்டேன். உதயநிதி சாருடனும், அருள்நிதி சாருடன் நடிக்க வாய்ப்பு வந்தது தற்செயலாக அமைந்த விஷயம். மேலும் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். அதனை அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் முறைப்படி அறிவிக்கும்" என்கிறார் ஐஸ்வர்யா.