ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஓகே கண்மணி படத்திற்கு பிறகு மணிரத்னம் தெலுங்கு மற்றும் தமிழில் அழகான காதல் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை முடித்துவிட்டு அடுத்ததாக படப்பிடிப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறார். அவரது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமே தயாரிக்கிறது. முன்பெல்லாம் மணிரத்னம் படத்தில் நடிக்க தவம் கிடந்த நடிகர்கள் எல்லாம் இப்போது ஆளைவிட்டால் போதும் என்று தெரித்து ஓடுகிறார்கள். இத்தனைக்கு ஓகே கண்மணி சுமாரான வெற்றிப் படம்தான்.
படத்தில் துல்கர் சல்மானும், கீர்த்தி சுரேசும் நடிப்பதாக இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் விலகிவிட்டார். அவருக்கு பதிலாக நான் ஈ பட ஹீரோ நானி நடிப்பதாக சொல்லப்படுகிறது. துல்கருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக சொல்லப்பட்டது. இப்போது அவரும் விலகிக்கொள்ள அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகை சாயாமி கெர் நடிப்பார் என்று தெரிகிறது. துல்கரும், கீர்த்தியும் விலகியதற்கான காரணம் தெரியவில்லை, அல்லது விலக்கப்பட்டார்களா என்றும் தெரியவில்லை.
சாயாமி கெர் தெலுங்கில் ரே படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது மிர்ஸியா என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இவர் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை உஷா கிரணின் பேத்தி. இவரது அம்மா உத்தாரா மெதர் கெர் மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர், அத்தை நடிகை ஷபனா ஆஸ்மி. ஆக மொத்தம் பிரபலமான அழகு குடும்பத்திலிருந்து வருகிறார் சாயாமி.