பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பாகுபலி என்கிற பிரமாண்டமான படத்தை கொடுத்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் கனவுப்படம் இனிமேல் தான் உருவாக இருக்கிறது என்பதையும் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் அந்தப்படத்தில் ராஜமவுலியின் மனம் கவர்ந்த மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் கசிந்ததை சொல்லியிருந்தோம் அல்லவா..? இதற்காக மோகன்லாலுக்கு கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 2017ல் ஆரம்பித்து 2019ல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் ராஜமவுலி.
இது ஒரு பக்கம் இருக்க ராஜமவுலியாவது, மோகன்லாலை வைத்து இயக்குவதாவது என பலருக்கும் இந்த புராஜெக்ட்டின் மேல் இன்னும் முழு நம்பிக்கை வரவில்லை. ஆனால் இதற்கு சில வருடங்களுக்கு முன்பே மோகன்லாலை வைத்து படம் எடுக்க திட்டமிட்டிருந்தார் ராஜமவுலி.. ஆனால் சில காரணங்களால் அந்தப்படம் கைவிடப்பட்டது.. அதுவும் கூட பேச்சுவாக்கில் சொல்லப்பட்டு வந்த செய்தியாகத்தான் இருந்தது. ஆனால் அது உண்மைதான் என்கிற விபரம் இப்போது சில ஆதரங்களுடன் வெளியாகியுள்ளது.
பாகுபலி படத்தில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றிய மனு ஜெகத், ஆர்ட் டைரக்டர் சாபுசிரிலின் உதவியாளர் தான். மோகன்லாலை வைத்து ஆரம்பிக்கப்பட்ட அந்த புராஜெக்ட்டிலும் இவர் கூடவே இருந்துள்ளார். அப்போது அந்தப்படத்தில் நடிக்க இருந்த மோகன்லாலை வைத்து போட்டோஷூட் நடத்தியதும், சில ஸ்கெட்ச்சுகள் போடப்பட்டதையும் தற்போது தனது பேஸ்புக்கில் வெளியிட்டு அப்படி ஒரு படம் ஆரம்பிக்கப்பட்டதையும் பின்னர் ட்ராப் ஆனதையும் சொல்லாமல் சொல்லியுள்ளார். அதனால் பாதியிலேயே நின்ற தனது கனவை நனவாக்கும் விதமாக மோகன்லாலை வைத்து இந்தமுறை தனது படத்தை ராஜமவுலி இயக்குவார் என்பது ஓரளவு உறுதியாகவே தெரிகிறது.