ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கு திரை உலகின் இளம் நடிகர் ராஜ் தருண் நடிப்பில் உருவாகியுள்ள குமாரி 21F திரைப்படம் அக்டோபர் 30 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இப்படத்திற்கு பின்னர் ராஜ் தருண் இயக்குனர் பூரி ஜெகன்நாத் எழுதிய கதையின் நாயகனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இப்படத்தை பிரபல நடிகை ரேவதி இயக்கவுள்ளார். தற்போது பூரி ஜெகன்நாத் மற்றும் ராஜ் தருண் இப்படத்திற்கான கதை விவாதத்திற்காக பேங்காங் சென்றுள்ளனர். இப்படத்திற்காக பூரி ஜெகன்நாத் கதை மற்றும் வசனங்கள் மட்டுமே எழுதவுள்ளார்.ரேவதியே இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை பூரி ஜெகன்நாதே தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. நடிகர் வருண் தேஜ் நடிப்பில் லோபர் படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.