நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படம் அக்டோபர் 21 அன்று வெளியாவது உறுதி என்றும் அதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெற்றிப்பட இயக்குநரான பொன்ராம் இயக்கத்தில் உருவான இப்படம் ரெடியாக பல மாதங்களாகின்றன. கமலை வைத்து உத்தமவில்லன் படத்தைத் தயாரித்ததினால் நிதி சிக்கலில் மாட்டிக்கொண்டார் லிங்குசாமி. அதனால் ரஜினி முருகன் படத்தை குறிப்பிட்ட தேதியில் அவரால் வெளியிட முடியவில்லை.
உத்தமவில்லன் படத்துக்காக வாங்கிய கடனை அடைத்தால்தான் ரஜினிமுருகன் படத்தை வெளியிட முடியும். இப்படியொரு கஷ்டமானநிலையில் இருந்த லிங்குசாமி ஒருவழியாக கடன்களை அடைக்க தக்க ஏற்பாடுகளை செய்துவிட்டதாக லிங்குசாமி வட்டாரம் தெரிவிக்கிறது. எனவே அக்டோபர் 21 அன்று ரஜினி முருகன் திரைக்கு வருவதில் எந்தவித தடையும் இருக்காது என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
இந்நிலையில் ரஜினி முருகன் படம் வெளியாகும் அதேதினத்தில் சந்தானம் நடித்த வாலிப ராஜா படமும் வெளியாகிறது. சிவகார்த்திகேயன், சந்தானம் இருவருமே விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் என்ற காரணத்தினாலோ என்னவோ ஆரம்பத்திலிருந்தே இருவருக்கும் ஒத்துவரவில்லை. சந்தானம் காமெடியனாக நடித்துக்கொண்டிருக்க, சிவகார்த்திகேயனோ ஹீரோவானார். சிலபடங்களிலேயே முன்னணி ஹீரோவானார். காமெடியனாக நடித்துக் கொண்டிருந்த சந்தானமும் பின்னர் ஹீரோவானார்.
சந்தானம் - சிவகார்த்திகேயன் இருவரும் சிம்பு தனுஷ் போல் மோதிக்கொண்டதில்லை. ஆனாலும் இருவருக்கும் சுமுகமான நட்பு இல்லை.. இப்படியான சூழலில்தான், சிவகார்த்திகேயன் படம் வெளியாகும் அதே நாளில் தான் நடித்த படத்தையும் களத்தில் இறக்குகிறார் சந்தானம்.